மதுராந்தகம், மே16- செங்கல்பட்டு மாவட்டம். மதுராந்தகம் வட்டம், இருசாமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி இவரது மகன் ஜெயபிரகாஷ்(16) என்பவர் மதுராந்தகம் இந்து அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 5 ம் தேதி அவரின் வீட்டின் அருகே உள்ள பனை மரத்தில் ஏறிய போது ஜெயபிரகாஷ் தவறி விழுந்துள் ளார். இதில் அவருக்கு தலை மற்றும் இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மீட்ட உறவினர்கள்2 மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்து பின் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த ஜெயபிரகாஷ் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்து மதுராந்தகம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.