சிதம்பரம், ஜூலை 20-
சிதம்பரம் நகரத்திற்கு உட்பட்ட வேங்கான் தெரு வில் குரு நமச்சிவாய மற்றும் திருப்பாற் கடல் மடம் இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அந்த மடத்திற்கு சொந்தமான இடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு 22 வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
இந்த வீடுகளில் அங்குள்ள குரு நமச்சி வாய கோவிலுக்கு செல்வ தால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கும் இடர்பாடு ஏற்பட்டு வந்தது. இங்குள்ள வீடுகளை காலி செய்ய வேண்டும் என பக்தர் ஒருவர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அதை காலி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தர விட்டது. இதை எதிர்த்து 8 பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மீதமுள்ள 14 வீடுகள் ஏற்கெனவே பிறப்பித்த நீதிமன்றம் உத்தரவின் படி வீடுகளை காலி செய்து சீல் வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் வியாழக் கிழமை (ஜூலை 20) இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் வரு வாய்த் துறையினர் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட 14 வீடுகளுக்கு சீல் வைத்து அதற்கான விவரத்தை கதவுகளில் ஒட்டினார்கள். அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்த மக்களுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே அவகாசம் வழங்கினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா கூறுகையில், “குடி யிருக்கும் வீடுகளுக்கு சீல் வைத்தது கண்டிக்க தக்கது என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்த பிறகு நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.