புதுச்சேரி, மே 29- புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையம் பின்புறம் உள்ள நரிக்குறவர் காலனியில் போதிய அடிப்படை வசதி கள் இல்லாததால் பழங்குடியின மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். நரிக்குறவர் காலனியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 60 குடும்பங்க ளுக்கு தொகுப்பு வீடுகள் புதுச்சேரி அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்டது. தற்போது இந்த வீடுகள் அனைத்தும் சிதலமடைந்து வாழ்வதற்கே தகுதியற்றதாக உள்ளது. மேலும் குடி நீர், பொது கழிப்பறை வசதி போன்ற வைகளும் இல்லாத நிலை தொடர்கதை யாக உள்ளது என்று குற்றச்சாட்டு எழுகிறது. புதுச்சேரி கல்வித்துறை மூலம் அங்கன்வாடி செயல்பட்டு வந்ததாகவும், அது முற்றிலும் செயல் படவில்லை என்றும் நரிக்குறவர் மக்கள் வேதனையாக கூறுகின்றனர். தாங்கள் மிருகங்களையும், பறவை களையும் வேட்டையாடுவதை கைவிட்டு பாசி மணி கோர்த்தல், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்களை வாங்கி புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் வியா பாரம் செய்து வருகிறோம். புதுச்சேரி கடற்கரையில் இருந்து லாஸ்பேட்டை விமான நிலையம் பின்புறம் வருவ தற்கு போதிய வாகன வசதியும் இல்லை. இதனால் மிகுந்த சிரமத்திற்கு நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறோம் என்றும் நரிக்குற வர் பெண்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். நரிக்குறவர் மக்களின் தேவைகளை ஆராய்வதற்காக தீண்டாமை ஒழிப்பு முன்னணி புதுச்சேரி மாநில செயலாளர், வழக்கறிஞர் சரவணன் தலைமையில் நலத்திட்டம் மற்றும் வழிகாட்டல் நிகழ்ச்சி புதனன்று (மே.29) நடை பெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் கொளஞ்சியப்பன், ராம்ஜி,அரிகிருஷ்ணன், உமா சாந்தி, குப்புசாமி, விநாயகம், நிலவழகன் ஆகியோர் ஆய்வு முகாமில் பங்கேற்ற னர். அப்போது நரிக்குறவர் மக்களின் அடிப்படை தேவைகளை குறித்து மடிக்கணினி மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டது. அப்போது நரிக்குறவர் மக்களுக்கு தற்போது உள்ள சிதிலமடைந்துள்ள குடியிருப்புகளை சீர் செய்து கொடுக்க வேண்டும், கூடுதலாக 50 தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். வாக்குரிமை அட்டை, ஆதார் அட்டை உள்ள ரேஷன் அட்டை மட்டும் இன்னும் பல குடும்பங்களுக்கு வழங்கப்படவில்லை. நரிக்குறவர் மக்களை பிற்படுத்தப்பட்ட பழங் குடியினராக அங்கீகரித்துள்ள புதுச்சேரி அரசு, பழங்குடியினர் அங்கி கரித்து நரிக்குறவர் மக்களுக்கு அனைத்து சலுகைகளையும் உரிமை களையும் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கள ஆய்வு மூலம் கோரிக்கை வைத்துள் ளது.