districts

img

திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் சிபிஎம்  சார்பில் ஆர்ப்பாட்டம்

இனவெறி இஸ்ரேல் அரசு பாலஸ்தீன பொதுமக்கள் மீது தொடுக்கும் போரை உடனே நிறுத்த வலியுறுத்தி திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் சிபிஎம்  சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிபிஎம் நகர செயலாளர் எம்.பிரகலநாதன் தலைமை தாங்கினார், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், சிபிஐ நிர்வாகிகள் வெ. முத்தையன், தங்கராஜ், மதிமுக மாவட்ட செயலாளர் சீனி. கார்த்திகேயன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எஸ்.எம். நவாப் ஜான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் எம். கலிமுல்லா, திக மாவட்ட தலைவர் சி.மூர்த்தி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன், ப.செல்வன், இரா.பாரி, ஏ. லட்சுமணன், எஸ் ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;