வேலூர், மே 29 - வேலூர் மாநகர் ஆற்காடு சாலை யில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் மற்றும் உயிரிழந்தவர்களை தங்களது சொந்த ஊருக்கு செல்ல மருத்துவமனை வெளியில் செயல்படும் ஆம்புலன்சை வாகனங்கள் அனுமதிக்க கோரி வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு சார்பில் மனு அளிக்கப்பட்டது. வேலூர் மாவட்ட சிஐடியு செயலா ளர் எஸ்.பரசுராமன் அளித்த மனு விவரம் வருமாறு, வேலூர் ஆற்காடு சாலையில் செயல்பட்டு வரும் சிஎம்சி மருத்துவமனையில் கிளை ராணிப் பேட்டை மாவட்ட எல்லையான பூட்டுத் தாக்கில் செயல்பட்டு வருகிறது. இங்கு மேற்குவங்கத்தை சேர்ந்த நோயாளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி இறந்துவிட்டார். அவரது உடலை மேற்கு வங்கத்திற்கு எடுத்துச்செல்ல சிஎம்சி மருத்துவமனை மூலம் நடத்தும் ஆம்புலன்சில் எடுத்துச் செல்ல ரூ.85.000 கேட்டுள்ளனர். இதனால் இறந்தவர் உறவினர் மருத்துவமனை வெளியில் இயங்கும் தனியார் ஆம்புலன்சில் எடுத்துச் செல்ல ரூ.60,000 கேட்டனர். நோயாளிக்கு மருத்துவ செலவு பல லட்சம் செலவு செய்த பிறகு இறந்தவர்களின் சடலத்தை சிஎம்சி நடத்தும் ஆம்புலன்சில் கூடுதல் பணம் கட்டி எடுத்து செல்லவும் என கூறுவது சட்டத்திற்கு புறம்பான செயலாகும். ஆனால் தனியார் ஆம்புலன்சுகள் குறை வான கட்டணத்தில் மருத்துவமனைக்கு உள்ளே வந்து எடுத்துச் செல்ல அனு மதி அளிக்காமல் நோயாளியின் உறவினர் பாதுகாவலர் மூலம் மீண்டும் மருத்துவமனைக்கு உள்ளே வலுக் கட்டாயமாக அழைத்து சென்றனர். எனவே இச்சம்பவத்திற்கு காரண மானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எவ்வித தடையுமின்றி நோயாளிகளின் வசதிக்கேற்ப மருத்துவமனைக்கு உள்ளே இருந்து நோயாளிகள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடலை வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங் களுக்கு அழைத்துச் செல்வதற்கான மருத்துவமனை வெளியில் உள்ள தனியார் ஆம்புலன்ஸ் அனுமதி அளிக் குமாறு மனுவில் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பின் போது வேலூர் மாவட்ட சாலைப் போக்குவரத்து தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரபாகரன், ஐடா ஸ்கடர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கத்தின் கிளை தலைவர் அண்ணாதுரை, செயலாளர் அந்தோணி பாபு, பொருளாளர் வினோத், துணைத் தலைவர் ரமேஷ், துணைசெயலாளர் அன்பரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். குறிப்பாக கொரோனா காலத்தில் வெளிமாநிலத்திலிருந்து சி.எம்.சி மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றவர்களையும் இறந்தவர் களையும் அந்தந்த மாநிலத்திற்கு கொண்டு செல்ல சிஎம்சி நடத்தும் ஆம்புலன்சை எடுத்து செல்லாத நிலை யில், வெளியில் உள்ள ஆம்புலன்ஸ் மூலம் தான் கொண்டு செல்ல பேருதவி புரிந்தது என்பது குறிப்பிடத்தக்க தாகும்.