districts

போட்டோ ஸ்டூடியோ கதவை உடைத்து திருட்டு

அச்சிறுப்பாக்கம், ஜூலை 7-

     அச்சிறுப்பாக்கம் அடுத்த தொழுபேட்டில் செயல்பட்டு வந்த பாலு என்பவருக்கு சொந்தமான  சத்யா போட்டோ ஸ்டுடியோவில் வியாழனன்று இரவு பூட்டை உடைத்து கடையில் இருந்த விலை உயர்ந்த  கேமரா ரொக்கப்பணம்  ரூ.2 ஆயிரம் மற்றும் பென் டிரைவர்கள் திருடப்பட்டிருந்தது. வழக்கம் போல் வெள்ளியன்று கடையை திறக்க வந்த பாலு கடை கதவு உடைக்கப்பட்டு திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார் இதுகுறித்து பாலு கொடுத்த புகாரின் பேரில் அச்சிறுப்பாக்கம் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.  

     செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், அச்சரப்பாக் கம், மேல்மருவத்தூர், செய்யூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் சம்பவம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் வாழும் நிலை உள்ளது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மதுராந்தகம் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களை மதுராந்தகம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பட்டா கத்தி, 4 இருசக்கர வாகனம் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட நகை,  செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.