நெல்லை சிபிஎம் அலுவலகத்தை தாக்கி சூறையாடிய சாதி வெறியர்களை கண்டித்து சிபிஎம் குடியாத்தம் நகர குழு சார்பில் நகர செயலாளர் பி.காத்தவராயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி, இரா.சிவா (திவிக) வி.ஐ.சிவக்குமார் (திக), விவேக் (விசிக), வழக்கறிஞர் சு.சம்பத்குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் வி.குபேந்திரன் ஆகியோர் பேசினர்.