விழுப்புரம்,ஜூலை 7-
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி திரவுபதி அம்மன் திருக்கோயில் வழிபாடு தொடர்பாக, ஒரு பிரிவினரிடம் வருவாய்க் கோட்டாட்சி யர் அ.கு.பிரவீணாகுமாரி வெள்ளிக் கிழமை (ஜூலை 7) விசாரணை நடத்தினார்.
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள ராஜா திரவுபதி அம்மன் கோவிலில் வழிபாடு செய்வது தொடர்பாக, இருவேறு சமுதாய மக்களிடையே ஏற்பட்ட பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு எட்டப்படாததால், கடந்த ஜூன் மாதம் 7 ஆம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்கு வருவாய்த் துறையினர் ‘சீல்’ வைத்தனர்.
இந்நிலையில் விழுப்புரம் வரு வாய்க் கோட்டாட்சியர் பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய வருவாய்க் கோட்டாட்சியராக அ.கு பிரவீணா குமாரி பொறுப்பேற்றார்.
இதைத் தொடர்ந்து, திரவுபதி அம்மன் கோயில் விவகாரம் தொடர் பாக 2 ஆம் கட்ட விசாரணை வெள்ளிக் கிழமை (ஜூலை 7) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இருதரப்பினரிடையேயும் தனித்தனியாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள வருவாய்க் கோட்டாட்சியர் முதல் கட்டமாக ஒரு தரப்பைச் சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்களான 5 பேர் மட்டும் கோவில் நிலம் தொடர்பாக உரிய ஆவணங்களுடன் 7 ஆம் தேதி காலை 11 மணிக்கு விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியர் அலு வலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வ விளக்கத்தை அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து விழுப்புரம் வரு வாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசா ரணையின் போது சம்பந்தப்பட்ட 5 பேரும் ஆஜராகினர். இவர்களிடம் கோட்டாட்சியர் அ.கு. பிரவீணா குமாரி விசாரணை மேற்கொண்டார். இதில் வட்டாட்சியர் வேல்முருகன் மற்றும் அலுவலர்கள், காவல் துறை யினர் பங்கேற்றனர்.