districts

img

போச்சம்பள்ளியில் கடும் வெயில் வாழைதோட்டம் வாடியது

கிருஷ்ணகிரி, மே 16- போச்சம்பள்ளி வட்டத்தை அடுத்துள்ள சைதாப்பேட்டை ஒட்டிய பகுதிகளில் 10 ஏக்கர் வாழைதோட்டம் கடுமையான வெயிலால் வாடி காய்ந்துள்ளது. வாழை குலை தள்ள ஆரம்பித்தது முதல் கடந்த இரண்டு மாத காலமாக வரலாறு காணாத கடும் வெயிலால்  கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டது. 10 ஏக்கர் வாழை தோட்டம் முற்றிலும் பாதித்துள்ளது. மாவட்ட மற்றும் வேளாண் துறை நிர்வாகம் இதுகுறித்து ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி போச்சம்பள்ளி வட்டக்குழு சார்பில் செயலாளர் சாமு மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

;