districts

img

நனைந்து வீணாகும் மருந்து மாத்திரைகள்: கண்டுக்கொள்ளாத அரசு அதிகாரிகள்

கள்ளக்குறிச்சி,ஜூன் 1 - கள்ளக்குறிச்சி நகர்புற ஆரம்ப சுகா தார நிலையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் மாதாந்திர சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு வந்து செல்கின்றனர். இவர்க ளுக்கு வழங்கக் கூடிய மருந்து மாத்திரைகள் பாது காத்து வைத்திருக்க கூடிய அறையில் தண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்யவில்லை. இதனால், மருந்து மாத்தி ரைகள் நனைந்து வீணாகி வருகிறது. மருந்து பாதுகாப்பு அறை அசுத்தமாக இருந்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. எனவே சுகாதாரத்துறையும் மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று கர்ப்பிணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;