districts

img

இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் நடத்தி வரும் இனப் படுகொலை

இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் நடத்தி வரும் இனப் படுகொலையை கண்டித்து காஞ்சிபுரம் தேரடியில் சிபிஎம் மாவட்ட குழு சார்பில் ஞாயிறன்று (ஜூன் 2) மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.நேரு தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.  இதில் மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார், மாவட்டச் செயலாளர் சி.சங்கர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.சிவப்பிரகாசம், பி.சீனிவாசன், வி.சீனிவாசன், ஜி.எஸ்.வெங்கடேசன், எம்.கன்னிகா, கே.சங்கர், இ.சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.