குவைத் நாட்டில் உயிரிழந்த முட்டம் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரையின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்தை வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் உடனிருந்தார்.