ராணிப்பேட்டை, ஜூன் 9 - தமிழகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங் கள் மற்றும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங் கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2024-2025ஆம் கல்வி யாண்டிற்கான பயிற்சி யாளர் சேர்க்கை நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. தொழிற்பயிற்சி நிலை யங்களில் பயிற்சி பெற 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப் பங்கள் www.skilltraining. tn.gov.in என்ற இணைய தளத்தில் மே.10 முதல் பெறப் பட்டு வருகிறது. விண்ணப் பங்கள் பெற கடைசி தேதி ஜூன் 7 என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஜூன்13 வரை கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. மேலும், தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் ஐயம் ஏற்படும் நேர்வில் மின்னஞ் சல் principalgitirpt@gmail.com மற்றும் imcitiakm@gmail.com அலைபேசி எண் 9499055682, 9445269516, 9499055679, 9080241926, 9499055680, 9840703770 தொடர்பு கொள்ளலாம்.