சாதிய ஆணவப் படுகொலை, பாலியல் பலாத்காரம், வரதட்சணைக் கொடுமைகள் இவற்றுக்கு எதிராக சட்டமன்றத்தில் கடுமையான சட்டங்களை இயற்ற வலியுறுத்தி ஓசூரில் வாலிபர், மாதர் சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். வாலிபர் சங்க மாவட்ட துணை தலைவர் நாகேஷ் பாபு, மஞ்சுநாத், ரவி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜெம்ஸ் ஆஞ்சலா மேரி, புனிதா, சந்திரிகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.