districts

img

தியாகி அஞ்சலை அம்மாள் பிறந்தநாள்: சிபிஎம் தலைவர்கள் மரியாதை

கடலூர், ஜூன்.1- சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சமரசம் இன்றி போராடிய பெண் போராளி,  தென்னாட்டு ஜான்சி ராணி என்று அழைக்கப்பட்டவர் தியாகி அஞ்சலை அம்மாள். அவரது 135 வது பிறந்த தினம் ஜூன் 1 அன்று கடலூரில் கொண்டாடப்பட்டது. கடலூர் முதுநகர் காந்தி பூங்காவில் அமைந்துள்ள அவரது சிலைக்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தலை மையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கருப்பையன், கடலூர் மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.ஆள வந்தார், எஸ்.கே.பக்கிரான், மாநகர குழு உறுப்பினர்கள் ஸ்டாலின், தேவநாதன், ஒன்றிய குழு உறுப்பினர் பாண்டியன், ஆறு முகம், பக்கிரி,  கல்யாணசுந்தரம், பித்தளை பாத்திர தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி சண்முகம், சாலையோர நடை பாதை வியாபாரிகள் சங்கம் மாவட்ட செய லாளர் சங்கமேஸ்வரன் கலந்து கொண்டனர். மணிமண்டபம்: அரசுக்கு கோரிக்கை தியாகி அஞ்சலை அம்மாளுக்கு கடலூரில்  மணிமண்டபம் அமைத்து அங்கு, அவரது வாழ்க்கை வரலாற்றை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மணிமண்டபத்தில் குறிப்பு வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது.