districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி... கொள்ளிடம் இடது கரையில் சாலை அமைக்கும் பணி துவக்கம்

சிதம்பரம், மே 21- சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றின்  இடது கரையில் புதிய சாலை அமைக்க ஒப்பந்த  பணிகள் ரூ.19 கோடியில் விடப்பட்டது. இதில் வல்லம் படுகையில் இருந்து முள்ளங்குடி வரை 9 கி.மீ தூரத்தை ஊரக உள்ளாட்சி துறை ரூ.7 கோடியே 77  லட்சம் செலவில் நடை பெறும்  பணியானது முடிக் கப்படாமல் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இது குறித்து தீக்கதிர் நாளிதழ் மே 21ஆம் தேதி அன்று படத்துடன் செய்தி வெளி யிட்டது. இதனையொட்டி கடலூர்  மாவட்ட நிர்வாகம் பணியை  விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க உத்தர விட்டனர்.  அதன்பேரில் மே 21-ஆம் தேதி பொக்ளின் இயந்திரம் மூலம் கொள்ளிடக்கரையில்  கருப்பூர் கிராமத்தின் அருகே பழைய சாலையில் உள்ள கருங்கல்களை பொக்ளின் இயந்திரம் மூலம் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.  இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வர வேற்று தீக்கதிர் நாளி தழுக்கு நன்றி தெரிவித்த னர்.

;