இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்து புதுச்சேரியில் அண்ணா சிலை எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஆர். சரவணன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் ராஜாங்கம், மூத்த தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் சுதா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுதா, பெருமாள், தமிழ்ச்செல்வன், கொளஞ்சியப்பன், சீனிவாசன், கலியமூர்த்தி, பிரபுராஜ், சத்யா, இடைக்குழு செயலாளர்கள் மதிவாணன், அன்புமணி சரவணன், ராமமூர்த்தி உட்பட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.