districts

img

ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை பணி ஓய்வு பெற்றார்

திருவண்ணாமலை, ஜூன். 1- தூத்துக்குடி மாவட்டம் வல்ல நாட்டைச் சேர்ந்த வெள்ளத்துரை திருவண்ணாமலை மாவட்ட ஏடிஎஸ்பியாக பணியாற்றி வந்தார். 1997 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணிக்கு சேர்ந்த இவர், 1998 ஆம் ஆண்டு திருச்சி பாலக்கரை உதவி ஆய்வாளராக பணியாற்றிய போது, ரவுடி கோசி.ஜானை என்கவுண்டர் செய்தார். அதைத் தொடர்ந்து,  பல்வேறு என்கவுன்டர்கள் செய்துள்ளார். மேலும் 2004 ஆம் ஆண்டு  சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்கும் அதிரடிப்படை குழுவில் இடம் பெற்றார். வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அவருக்கு இரட்டை பதவி உயர்வு வழங்கப்பட்டு, துணை காவல் கண்காணிப்பாளராக பதவியேற்றார்.  கடந்த 2022 ஆம் ஆண்டு, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கூடுதல் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் 2024 மே மாதம்  31 ஆம் தேதி இவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம் இருந்து முறைப்படி பணி ஓய்வு பெற்றார். மேலும், அவருடைய பணம் 5 லட்சம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

;