districts

img

சென்னை விமான நிலையத்தில் நிர்வாணமாக ஓடிய பயணி

சென்னை, மே 30- சென்னை விமான நிலை யத்தில் பயணி ஒருவர் திடீ ரென நிர்வாணமாக வந்த தால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் மதுரையை சேர்ந்த, அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற மகன் தன் தந்தை யுடன் வந்துள்ளார். எப்பொழுதும் சென்னை விமான நிலையத்தில் நடைபெறும் வழக்கமான சோதனைகள் நடைபெற்று உள்ளது. இதனைத் தொடர்ந்து உடைமைகள் பிரிவில் சோதனை முடித்து விட்டு குடியுரிமை பிரிவுக்கு செல்லும் போது, சம்பந்தப் பட்ட நபர் ஆடைகள் இல்லா மல் நிர்வாணமாக வந்துள் ளார். இதைக் கண்ட பாது காப்பு ஊழியர்கள் விமான  நிலைய ஊழியர்கள், பயணி கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மேற்படி நபரை விமான நிலைய ஊழி யர்கள் அங்கிருந்து அப்புறப் படுத்தி அவரது பயணத்தை  ரத்து செய்து, அவரது உறவினர் வீடான மதுரைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து ஏன் திடீரென அவர் நிர்வாணமாக வந்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சோதனை செய்யும் போது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.

;