districts

img

தனியார் வங்கிகளை தேசியமயமாக்க வலியுறுத்தி இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் பிரச்சாரம் நடைபெறுகிறது

தனியார் வங்கிகளை தேசியமயமாக்க வலியுறுத்தி இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் ஜூலை 19-22 தேதிகளில் பிரச்சாரம் நடைபெறுகிறது. மாநிலச் செயலாளர் எஸ்.பிரேமலதா தலைமையிலான குழுவினருக்கு புதனன்று (ஜூலை 19) கிண்டியில், சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தட்சிண ரயில்வே எம்பிளாயீஸ் யூனியன் சார்பில் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பல்லாவரத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க துணைத்தலைவர் ஜி.செந்தில்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தென்சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு உள்ளிட்ட பலர் பேசினர்.