districts

img

திருபெரும்புதூர் அருகே கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையால் சேதம்

காஞ்சிபுரம் ,மே 16- காஞ்சிபுரம் மாவட்டம், திருபெரும்புதூர் பகுதியில் அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் கொள் முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தது. இதுகுறித்து விவரம் வரு மாறு, காஞ்சிபுரம் மாவட்டம் ,திரும்புதூர் ஒன்றியம் ராமானுஜபுரம் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையம் அமைக் கப்பட்டது. இங்கு மதுர மங்கலம், சிவன் கூடல், ஜம்போடை மேல் மதுர மங்கலம் உள்ளிட்ட கிரா மங்களைச் சேர்ந்த விவசாயி கள் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தில் விற்பனை செய்து வருகின்றனர். திருபெரும்புதூர் ஒன்றி யம் ராமானுஜபுரம் ஊராட்சி யில் அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையம் அமைக்கப் பட்டது. இங்கு மதுரமங்க லம், சிவன் கூடல், ஜம் போடை மேல் மதுரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலை யத்திற்கு கொண்டு வந்த னர். ஆனால் திறந்த வெளியில் மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டிரு ந்ததால் அவை மழையில் நனைந்து நாசமானது.  இதுகுறித்து நேரடி நெல் கொள்முதல் நிலைய அதி காரி ஒருவர் கூறுகையில், ராமானுஜபுரம் ஊராட்சியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்துக்கு நெல் மூட்டைகளை மழையில் இருந்து பாதுகாக்க உணவு த்துறை தார்பாய் வழங்க வில்லை என்று கூறியுள்ளார்.  தற்போது விவசாயிகளிட மிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 2,000 கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் முறையான பாதுகாப்பின்றி மழையில் நினைந்து சேதம் அடைந்துள்ளன.  சேதமான நெல்மணி களில் முளைப்பு ஏற்பட்டால் வீணாகப் போய்விடும் என  விவசாயிகள் புகார் கூறு கின்றனர். இதனால் அரசுக்கு பல ஆயிரம் ரூபாய் வரு வாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறுகின்றனர். உழுதவன் கணக்கு பார்த்தால் உளக்கு கூட மிஞ்சாது என்பார்கள். ஆனால் அப்படியும் மிஞ்சிய நெல் கூட பாதுகாப்பு  உபகரண வசதியில்லாத தால் வீணாகி வருகிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனே தலையிட்டு விவ சாயியின் உழைப்பின் பல னான நெல்மணிகளை பாது காக்க நிரந்தர ஏற்பாடு செய்துதரவேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.