districts

img

ஏஆர்டி நகை நிறுவன நிதி மோசடி 12 மாதங்களுக்கு பிறகு இருவர் கைது

சென்னை,மே 16- சென்னை முகப்பேர் பகுதியில் செயல் பட்டு வந்த ஏ.ஆர்.டி நகை நிறுவனம், முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.  இந்த நிலையில், பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி ஏ.ஆர்.டி ஜுவல்லரி, ஏ.ஆர்.டி  நிதி நிறுவனம் உள்ளிட்ட வணிக வளாகங்க ளில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்  தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்ட பொது மக்கள் தங்களுடைய முதலீடு பணத்தைக் கேட்டு சென்னை பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்தில் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இந்த நிலையில், விசாரணையை தீவிரப் படுத்திய போலீசார், இதற்கு மூளையாகச் செயல்பட்ட முக்கிய முகவர்களான ஆஷா மற்றும் தேவா ஆகிய இரண்டு பேரை 12 மாதத்துக்குப் பிறகு தற்போது கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர். மேலும், இவர்களிடம் இருந்து சில ஆவ ணங்களும் கைப்பற்றப்பட்டு இருப்பதாக வும் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து இவ்வழக் கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வரு வதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

;