districts

இரவு நேரத்தில் வாகனங்களில் பெட்ரோல் திருடும் கும்பல்!

சிதம்பரம், ஜூன் 11- சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கதிர்வேல் நகர், வரதராஜ நகர், தமிழன்னை நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், குரு தேவ்நகர், முத்தையா நகர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளது. இந்த நகரில் வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் அவர்களது வீட்டு வாசலில் அவர்களது இருசக்கர வாக னங்களை நிறுத்தி வைக்கின்றனர்.

இதில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நள்ளிரவு நேரத்தில் இருசக்கர  வாகனங்களில் தொடர்ந்து பெட்ரோலை திருடி செல்கின்ற னர்.  இதனால்  வாகன உரிமை யாளர்கள் மிகுந்த  வேதனைக்கு ஆளாகின்றனர்.  இந்த நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு  கொத்தங்குடி ஊராட்சிக்குட்பட்ட சரஸ்வதி அம்மாள் நகரில் உள்ள ஒரு வீட்டில்  இருசக்கர வாக னத்தில் 3 பேர் வந்து அதில் ஒருவர் வீட்டின் சுவர் மீது எறி குதித்து அங்கிருந்த 2 இரு சக்கர வாகனத்தில் பெட்ரோலை பிடித்துள்ளனர்.

அப்போது அந்த இடத்தில் நாய்கள் குறைத்துள்ளது.   வீட்டின் உரிமையாளர் கதவை திறந்து வெளியே வந்து பார்த்த போது அவர்கள் பாட்டிலை போட்டு விட்டு மதில் சுவறை எகிறி குதித்து ஓடி  தப்பிச் சென்றனர். இவர்கள் மது மற்றும் கஞ்சா போதையில் இரவு நேரத்தில் இது போன்று தொடர்ந்து பல்வேறு வீடு களில் உள்ள இருசக்கர வாக னங்களில்  பெட்ரோல் உள்ளிட்ட கையில் கிடைத்த பொருட்களை திருடி வருகின்றனர்.

இரவு நேரத்தில்  போதையில் இருப்ப தால் இவர்களிடம் இது குறித்து கேட்பதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.  எனவே காவல்துறையினர் இதனை கண்காணித்து உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர். இதேபோல் கடந்த 20 நாட்க ளுக்கு முன்பு சிதம்பரம் நகரத்தில் துறவாடி தெருவில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடிய ஒருவர் பெட்ரோல் பிடித்துக் கொண்டு அருகே இருந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தியுள்ளார்.

பின்னர் அவரை காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் கண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர் . இதே போன்று பெறும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பு காவல்துறையினர் நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் தொடர் கோரிக்கையாக உள்ளது.