districts

img

கடனுக்கு அதிக வட்டி வசூலித்த பஜாஜ் பைனான்ஸ் திருப்பூரில் தொழிலாளி தற்கொலை; உறவினர்கள் மறியல்

திருப்பூர், செப். 8 - திருப்பூரில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம்  கடனுக்கு அதிக வட்டி வசூலித்ததால், விரக்தி  அடைந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆவேசமடைந்த உற வினர்கள், பொது மக்கள் பஜாஜ் பைனான்ஸ்  நிறுவனத்தை முற்றுகையிட்டு சாலை மறிய லில் ஈடுபட்டனர். திருப்பூர் அங்கேரிபாளையம் மகா விஷ்ணு நகரை சேர்ந்தவர் எல்.எஸ்.ஏ. ராஜேஷ் கண்ணன் (45). பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி செல்வி (40). இவர்களுக்கு இரண்டு குழந்தை கள் உள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு ராஜேஷ் கண்ணனின் மனைவி செல்வி பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில், ரூ.1 லட் சத்து 15 ஆயிரம் கடன் வாங்கி இருக்கிறார்.  இந்த கடனுக்கு மாதம் ரூ.4700 வீதம் கடன்  மற்றும் வட்டித் தொகை செலுத்தி வந்திருக் கிறார். இதுவரை ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் செலுத்தி இருக்கின்றார். எனினும் அசல் தொகை, வட்டி சேர்த்து இன்னும் ரூ.1  லட்சம் கட்ட வேண்டியிருக்கிறது என்று பஜாஜ் நிறுவனத்தினர் கூறியுள்ளனர். இதையடுத்து ராஜேஷ் கண்ணனும், செல் வியும் பஜாஜ் நிறுவனத்திற்குச் சென்று, ரூ.1. 70 லட்சம் செலுத்திய நிலையில் இன்னும்  எதற்கு ரூ.1லட்சம் செலுத்த வேண்டும் என்று  கேட்டுள்ளனர். எனினும்  அந்த நிறுவனத்தார்  கட்டாயம் இந்த தொகையை செலுத்த வேண் டும் என்று நிர்ப்பந்தம் செய்துள்ளனர். இந்த  கடன் விவகாரத்தால் குடும்பத்தில் இருவருக் கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது.  இந்நிலையில் மனவிரக்தி அடைந்த ராஜேஷ்கண்ணன் திருப்பூர் ரயில் நிலையம்  அருகே புதன்கிழமை மாலை ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவரது சட்டைப் பையில், ஒரு கடிதம்  இருந்ததை காவல் துறையினர் கைப்பற்றி னர். 

அதில், ’எனது மனைவி பஜாஜில் லோன்  வாங்கி பணம் கட்ட முடியாததால் நான் சாகி றேன். என் சாவுக்கு பஜாஜ் பைனான்ஸ்தான் காரணம். என எழுதப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சடலத்தை கைப்பற் றிய ரயில்வே போலீஸார் பிரேத பரிசோத னைக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜேஸ்கண் ணன் பஜாஜ் பைனான்ஸ் கடன் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்திருந்த தகவல் பரவிய நிலை யில் அவரது உறவினர்கள், அப்பகுதி பொது  மக்கள் கோபாவேசம் அடைந்தனர். வியாழக் கிழமை மதியம் திருப்பூர் அவிநாசி சாலை குமார் நகரில் உள்ள பஜாஜ் பைனான்ஸ் நிதி  நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். ராஜேஸ் கண்ணன் சாவுக்கு  காரணமான அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்த வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த மறியல் போராட்டம் காரணமாக அவிநாசி சாலையில் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. உடனடியாக திருப்பூர் மாநகர வடக்கு காவல் உதவி ஆணையர் அனில் குமார் தலைமையில் காவல் துறையினர் சம் பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில்   பஜாஜ் நிறுவனத்தின் மீது புகார் அளித்தால் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப் படும் என்று காவல் துறையினர் உறுதிய ளித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.  பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் இரு சக்கர வாகனக் கடன், தனிநபர் கடன் என எளி தில் கடன் தருவதாக விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை இழுக்கிறது. ஆனால் கடன் கொடுத்த பிறகு அவர்கள் முன் கூட்டியே சொன்னதற்கு மாறாக அதிக வட்டி,  அபராதம் என ஏதேனும் காரணம் சொல்லி கூடுதல் தொகையை வசூலிக்கின்றனர் என்று  பாதிக்கப்பட்டுள்ள பலர் குற்றம் சாட்டினர். இந்த நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மறியலில் ஈடுபட் டோர் கூறினர்.

;