உடுமலை, ஜூன் 19- கொங்கலக்குறிச்சி ஆரம்ப சுகா தாரநிலைய கட்டிடம் பரமாரிப்பு வேலைகள் செய்யாமல் இருப்பதால் மேல் நிலை தொட்டியின் கம்பிகள் வெளியே தெரிகிறது. இக்கட்ட டத்தை பராமரிப்பு செய்து தரம் உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. உடுமலை பள்ளாபாளையம் ஊராட்சி கொங்கலங்குறிச்சியில், ஆரம்ப சுகாதார நிலையம் பள்ள பாளையம், ஆலாம்பாளையம், சிவா நகர் மற்றும் கொங்கலக்குறிச்சி என பத்தாயிரத்திற்கும் மேல் மக்கள் தொகை உள்ள பகுதியில் செயல் பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத் தில் ஒரு தலைமை செவலியர் குடும் பத்துடன் தங்கும் வகையில் வீடு மற் றும் பிரசவம் பார்க்கும் வகையில் இரண்டு படுக்கைகள் கொண்ட கட்ட டமாக உள்ளது. இந்த கட்டடத்தை கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் பராமரிப்பு செய்யப்படவில்லை. இத னால் கட்டிடத்தின் மேல் இருக்கும் தண்ணீர் தொட்டியில் கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும், கட்ட டத்தின் பல்வேறு பகுதிகள் சிதிலம டைந்து உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோத னைகள், குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி போட என தினமும் நூற்றுக் கணக்கான பெண்கள் இங்கு வருகிற நிலையில் இந்த கட்டடத்தை பராம ரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பொது மக்கள் கூறு கையில், கொங்கலக்குறிச்சியில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் ஒரு தலைமை செவிலியர் தங்கி இருந்த போது, எங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தது. ஆனால் செவிலியர்கள் இங்கு தங்காமல் எந்த நேரத்தில் வரு கிறார்கள் என்றே தற்போது தெரிவது இல்லை. இதனால் பெரும் பகுதி நேரம் சுகாதார நிலையம் மூடியே உள்ளது. இதனால் நாங்கள் ஏமற்றத் துடன் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும், கட்டடத் தின் பல்வேறு பகுதிகள் சிதிலம டைந்து உள்ளது. நூற்றுக்கணக் கானோர் பயனடையும் இந்த சுகா தார நிலைய கட்டடத்தை அரசு உரிய பராமரிப்பு செய்திட வேண்டும். மேலும், முழு நேரம் இங்கேயே தங் கும் வகையில் செவிலியர்கள் நியம னம் செய்ய வேண்டும் என்றனர்.