திருப்பூர், ஜூன் 16- திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிதாக வழங்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப் புகளில் தண்ணீர் கசிந்து வீணாகி வருவது குறித்து மாநகராட்சி நிர்வா கம் கண்டுகொள்ளாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ள னர். திருப்பூர் மாநகராட்சி, 2 ஆவது மண்டலம், 5 ஆவது வார்டுக்குட்பட்ட குருவாயூரப்பன் நகர் அருகே எஸ். ஆர்.வி நகர் பகுதியில் ஆறு வீதிக ளில் 60க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு, கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு புதிய குடிநீர் இணைப்பு வழங் கப்பட்டன. ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் மீட்டர் உடன் இணைப்புகள் வழங்கப்பட்டன. குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதிலிருந்து தண்ணீர் விநியோகம் செய்யும் பொழுது, அந்த குடிநீர் இணைப்புகளில் தண் ணீர் பெருமளவு கசிந்து வீணாகி வருகிறது. குறிப்பாக, இப்பகுதியில் முறையான சாலை மற்றும் கழிவு நீர் வடிகால் வசதி இல்லை. இத னால் குடிநீர் குழாய்களில் கசிந்து வெளியேறும் குடிநீர் வீதிகளில் வழிந்து ஓடுகிறது. சில பகுதிகளில் இதனால் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. நன்னீரில் இருந்து தான் டெங்கு கொசு உற்பத்தி ஆகி றது என்றபோதும், இந்தக் குடிநீர் கசிவை தடுத்து சரி செய்வதற்கு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. இப்பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்ப டும் பொழுது, மிகப்பெரும் அளவு தண்ணீர் வெளியேறுகிறது. இதே திருப்பூர் நகரத்தில் பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை இருக்கும் நிலையில், இந்த இணைப்புகளில் குடிநீர் வீணாவது, வேதனை ஏற் படுத்துவதாக உள்ளது. இதுபற்றி மாநகராட்சி மண்டல அலுவலகத்தி லும், 5 ஆவது வார்டு மாமன்ற உறுப் பினரிடமும் புகார் தெரிவித்தும், குடி நீர் கசிவை தடுத்து நிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. அத்துடன் நாடாளுமன்றத் தேர்தலும் வந்த நிலையில், அலுவ லர்கள் தேர்தல் பணி என்று சாக்கு சொல்லி, இப்பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். தேர் தல் வாக்கு எண்ணிக்கையும் முடிந்து தேர்தல் நடத்தை விதிமுறையும் கைவிடப்பட்டு விட்டது. ஆனாலும், மாநகராட்சி அதிகாரிகள் இப்பிரச்ச னையில் கவனம் செலுத்தாமல் உள் ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மண்டல அலுவலகத்தில் புகார் அளித் தும், இப்பணியை மேற்கொண்டவர் களின் டெண்டர் காலம் முடிந்து விட்ட தால், அவர்களை அழைக்க முடி யாது, என்றும் கூறியுள்ளனர். மாநக ராட்சி நிர்வாகத்தின் இந்த அலட்சியத் தின் காரணமாக, பல்லாயிரக்கணக் கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகி றது. நீண்ட நாட்களாக நீடிக்கும் இப் பிரச்சனையில் மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குருவாயூரப் பன் நகர் கிளைச் செயலாளர் சந்தி ரன் வலியுறுத்தியுள்ளார். மேலும், பிரச்சனையில் தீர்வு காணாவிட் டால் அப்பகுதி மக்களை கலந்தாலோ சித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற் கொள்வோம் என்றும் அவர் கூறி யுள்ளார்.