districts

img

விபத்தில் காயமடைந்தவரை மீட்டு, சிகிச்சைக்கு அனுப்பி வைத்த ஆட்சியர்

நாமக்கல், மே 17- ராசிபுரம் அருகே சாலை விபத்தில் காயமடைந்த வரை மீட்டு, அரசு வாகனத்தில் மருத்துவமனைக்கு ஆட்சியர் அனுப்பி வைத்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா, நாள்தோறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடர்ந்து பார் வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். அதன் படி, வெள்ளியன்று ராசிபுரம் பகுதியில் ஆய்வுப்பணி களை மேற்கொள்ள சென்றார். அப்போது, பொம்ம குட்டைமேடு, லட்சுமி திருமண மண்டபம் அருகே நாமக் கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில், எதிர்பாராத  விதமாக இருசக்கர வாகனத்தில் சென்ற நாமக்கல் மாவட்டம், செல்லப்பம்பட்டி, மேற்கு பாலப்பட்டியைச் சேர்ந்த சதீஷ் (38) என்பவர், சாலை விபத்தில் காயம டைந்து கிடந்தார். இதையடுத்து அவ்வழியே சென்ற மாவட்ட ஆட்சியர் ச.உமா, காயமடைந்தவரை உடனடி யாக மீட்டு மாவட்ட ஆட்சியருடன் வந்த மற்றொரு அரசு அலுவலக வாகனத்தில் ஏற்றி நாமக்கல் அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு ஆட்சியரின் அறிவு றுத்தலின்படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

;