districts

வெள்ளியங்கிரி மலையில் ஏழு டன் குப்பைகள் அகற்றம்

கோவை, ஜூன் 12- வெள்ளியங்கிரி மலைப் பகுதிகளில்  ஏழு டன் குப்பைகள் அகற்றப்பட்டு உள் ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.

கோவை அருகே உள்ள வெள்ளி யங்கிரி மலையில், குறிப்பிட்ட சீசன்  காலத்தில்  ஏராளமானோர் மலை ஏறு வது வழக்கம். இது 6.5 கிலோ மீட்டர்  நீளமுள்ள மலை ஏற்ற பாதையில் அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்குக ளின் நடமாட்டமும் உள்ளது. ஒவ் வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல்  மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற லாம் என சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டதன் அடிப்படையில் இந்த  ஆண்டு ஏராளமானோர் வெள்ளியங்கிரி  மலை ஏறினர். 

இங்கு ஆறாவது மலையில் மலை  ஏறுபவர்கள் உபயோகித்து வீசிச்சென்ற  பழைய துணிகள் குவிந்து கிடந்துள் ளது. இதனால், ஆறாவது மலை பகுதி யில் ஏராளமான துணிகள் தேக்கம்  அடைந்து பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.  தற்போது சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து மழை பாதைகளில் தூய்மை செய்யும் பணி வனத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வனத் துறையினர் மற்றும் தன்னார்வலர்களை கொண்டு இப்பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த  சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை யால் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. தற்பொழுது, முழு அளவில் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று மலைகளிலும் கடைசி இரண்டு மலைகளான ஆறு மற்றும் ஏழாவது மலைகளிலும் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன. நான்காவது மற்றும் ஐந்தாவது மலைகளில் சுத்தம்  செய்யும் பணி இன்னும் மேற்கொள்ளப் படவில்லை.

இது குறித்து வனத்துறை அதிகாரி கள் கூறியதாவது, தற்பொழுது வரை வெள்ளியங்கிரி மலைப் பகுதிகளில் ஏழு டன் குப்பைகள் அகற்றப்பட்டு உள் ளன. ஓடைப் பகுதிகளில் துணிகளை  அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து  நடைபெற்று வருகிறது என்றனர்.