districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்

இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள் சேலம், ஜூன் 16- தம்மம்பட்டி அருகே பழுதடைந்து, எப்பொழுது வேண்டு மானாலும் இடிந்து விழும் நிலையிலுள்ள தொகுப்பு வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரப் பட்டி பேரூராட்சியில், கடந்த 1972 ஆம் ஆண்டு, தமிழக அரசின் பட்டியலின நலத்துறை சார்பில் 199 தொகுப்பு வீடுகள் ஆறு ஏக்கர் நிலத்தில் அப்பகுதியிலுள்ள ஏழை ஆதிதிராவி டர் மக்களுக்கு இலவசமாகக் கட்டித் தரப்பட்டன. இந்த வீடுகள் கட்டப்பட்டு தற்போது 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டன. தற்பொழுது அனைத்து வீடுகளும் மிகவும் பழுத டைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. 199 வீடுகளில் 25  வீடுகளில் வசிப்பவர்கள், தங்களது சொந்த செலவில் அக்குடியிருப்புகளை புதுப்பித்துக் கொண்டனர். எஞ்சிய 174 தொகுப்பு வீட்டிலுள்ளோர், தங்களது வீடுகளை சீரமைக்க வசதியில்லாமல் தவிக்கின்றனர். தற்போது, 174 வீடுகளும் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் தொகுப்பு வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் பல்வேறு காரணங் களால் வீடுகள் சீரமைத்து தரப்படவில்லை. இதுகுறித்து செந்தாரப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர் பவுனாம்பாள் கூறுகையில், தமிழக அரசால் கட்டித் தரப் பட்ட தொகுப்பு வீடுகள் அனைத்தையும் சீரமைத்து தர வேண்டும் என்று முதல்வர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், சேலம் ஆட்சியர் ஆகியோருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியுள்ளோம். தற்போதைய தொடர் மழை யால் இந்தத் தொகுப்பு வீடுகள் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் முன், தமிழக அரசு உடனடியாக இத்தொகுப்பு வீடுகளை சீரமைத்து தர வேண்டும், என்றார்.

சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்

சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கம் சேலம், ஜூன் 16- பாட்னா - மங்களூரு இடையே சேலம் மற்றும் போத்த னூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மங்களு ருவில் இருந்து ஜூன் 18, 25 மற்றும் ஜூலை 2 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் இரவு 8 மணிக்குப் புறப்படும் மங்க ளூரு - பாட்னா சிறப்பு ரயில் (எண்: 03244) வெள்ளிக் கிழமைகளில் காலை 7 மணிக்கு பாட்னாவைச் சென்றடை யும். இதேபோல பாட்னாவில் இருந்து ஜூன் 22, 29 ஆகிய சனிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு புறப்படும் பாட்னா - மங்களூரு சிறப்பு ரயில் (எண்: 03243) செவ்வாய்க்கிழ மைகளில் காலை 7 மணிக்கு மங்களூருவைச் சென்றடை யும். இந்த ரயிலானது, காசர்கோடு, நிலேஷ்வர், பையனூர், கண்ணூர், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூர், ஷொரணூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர், ஓங்கோல், விஜயவாடா, வாரங்கல், நாக்பூர், இடார்சி, ஜபல்பூர், தனபூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பேருந்து நிலையத்தில் பயணிகள் மறியல்

பேருந்து நிலையத்தில் பயணிகள் மறியல் திருப்பூர், ஜூன் 16- திருப்பூரில் இருந்து பல மணி நேரம் ஈரோட்டிற்கு பேருந்துகள் இயக்கப்படாததால் அவதிப்பட்ட பயணிகள், திருப்பூர் கலைஞர் பேருந்து நிலையத்தில் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். பனியன் தொழில் நகரான திருப்பூரில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தொழிலாளர்கள் சனியன்று இரவு வெளி மாவட்டங்களுக்கு செல்வது வழக்கம். இதனிடையே, திங்களன்று (இன்று) பக்ரீத் பண்டிகை விடுமுறை என்பதால் இரண்டு நாட்கள் விடுமுறை என்ற முறையில், சனியன்று இரவு வெளியூர் செல்வதற்கு, திருப்பூர் மத்திய பேருந்து நிலை யத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஈரோடு செல்வதற்கான அரசு பேருந்துகள் குறைவாக இயக்கப்பட் டது. இரவு 7.30 மணி அளவில் இருந்து ஈரோட்டிற்கு பேருந்து கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளா கினர். இந்நிலையில், 9.30 மணி அளவில் பேருந்து நிலையத் தின் முன்பு, பேருந்தை மறித்து பயணிகள் மறியலில் ஈடு பட்டனர். இதுகுறித்து தகவறிந்து வந்த தெற்கு போலீசார் விரைந்து வந்து, பயணிகளிடம் பேசி மறியல் போராட்டத்தை  கைவிடச் செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் போக்கு வரத்து அதிகாரிகளிடம் பேசி, ஈரோட்டிற்கு பேருந்துகளை இயக்கினர்.

பள்ளத்தில் சிக்கிய லாரி: போக்குவரத்து பாதிப்பு

பள்ளத்தில் சிக்கிய லாரி: போக்குவரத்து பாதிப்பு அவிநாசி, ஜூன் 16- செங்கல் பாரம் ஏற்றி வந்த லாரி, சாலையிலுள்ள பள்ளத் தில் சிக்கிக்கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து திருப்பூர் மாவட்டம், கருவம்பாளையம் பகுதிக்கு செங்கல் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. திருப்பூர் - தாராபுரம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத வித மாக சாலையில் உள்ள பள்ளத்தில் லாரியின் சக்கரமானது சிக்கிக் ண்டது. லாரி ஓட்டுநர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த வர்கள் நீண்ட நேரம் போராடியும், லாரியை பள்ளத்தில் இருந்து எடுக்க முடியவில்லை. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல றிந்து வந்த காவல் துறையினர், அவ்வழியே வந்த வாகனங் களை மாற்று வழிப்பாதையில் அனுப்பி வைத்தனர். இதனி டையே லாரியில் பாரம் அதிகமாக இருந்ததன் காரணமாக, கிரேன் உதவியுடன் லாரி மீட்கப்பட்டது.

கடத்தி வைக்கப்பட்டுள்ள இருளர் இன மக்கள்!

திருப்பூர், ஜூன் 16- கொத்தடிமைகளாக வேலை வாங்கி, கடத்தி வைக்கப்பட்டுள்ள இருளர் இன மக் களை மீட்க வேண்டுமென தன்னார்வ அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆதிவாசி மீட்பு மற்றும் வளர்ச்சிக்கான நல அமைப்பு (அவார்டு) தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி வி.துரை ராஜ், உடுமலை வருவாய் கோட்டாட்சிய ருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது: திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமத்தில், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங் களைச் சேர்ந்த சில இருளர் குடும்பங்களுக்கு  முன்பணம் கொடுத்து அழைத்து வந்து கட்டா யப்படுத்தி வேலை வாங்கி வருகின்றனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களை வாக்களிக்க அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். பள்ளி செல்லும் வயதுள்ள குழந்தைகளையும், பள்ளிக்கு அனுப்பாமல் தடுத்து வைத்து வேலை வாங்கி உள்ளனர். இவர்களுக்கு இதுவரை வழங்க வேண்டிய கூலியையும் வழங்காமல், தனி நபர் ஒருவர் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தி வருகிறார். பாதிக்கப்பட்ட இருளர் சமூக மக்களை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டுமென உடுமலை கோட்டாட்சிய ருக்கு மனு அனுப்பிய பின்னணியில், இந்த  விபரத்தை அறிந்து, இருளர் இன மக்களை  வேறு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள் னர். மடத்துக்குளம், சங்கரமநல்லூர் வடக்கு பகுதியில் திருவண்ணாமலை மாவட்டத் தைச் சேர்ந்த சதீஷ் என்பவரின் கட்டுப்பாட் டில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 8 குழந்தை கள் உட்பட 19 நபர்களை கரும்பு வெட்டும்  தொழிலில் கொத்தடிமையாக வைத்திருந் தார். கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில், அரசு அலுவலர்கள் மீட்பதற்குள் தகவல் தெரிந்து அந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி அருகாமையில் உள்ள கொழுமம் கிராமப்பகுதியில் தங்க வைத் துள்ளனர். இவர்களை மீட்க உதவி செய்யு மாறு கேட்டுக் கொள்வதாக துரைராஜ் கூறியி ருக்கிறார்.

காரை மடக்கி கொள்ளையடிக்க முயற்சி: 4 பேர் கைது

கோவை, ஜூன் 16- மதுக்கரை அருகே காரை மடக்கி கொள் ளையடிக்க முயன்ற நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கேரளம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அஸ் லாம் சித்திக் (27). கொச்சியில் விளம்பர ஏஜென்சி நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூன் 13 ஆம் தேதியன்று அஸ்லாம் சித்திக், தனது நண்பரான சார்லஸ் உள் ளிட்ட நான்கு பேருடன் பெங்களூரு சென்றார். அங்கு கணினி மற்றும் உதிரி பாகங்களை  வாங்கிக்கொண்டு, கோவை வழியாக கேர ளம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். கோவை மாவட்டம், மதுக்கரை நெடுஞ்சா லையில் ஞாயிறன்று அதிகாலையில் 3 மணி யளவில் வந்தபோது, 2 கார்களில் முகமுடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர் கள், அஸ்லாம் சித்திக் வந்த காரை மடக்கி கொள்ளையடிக்க முயன்றனர். மேலும், கண் ணாடியை உடைத்த நிலையில், அஸ்லாம் அங்கிருந்து தப்பி அருகே உள்ள சுங்கச்சா வடிச் சென்றார். இதையடுத்து மதுக்கரை காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப் பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்ட னர். தொடர்ந்து காரை மடக்கி கொள்ளைய டிக்க முயன்ற கேரளா மாநிலத்தைச் சேர்ந்த  சிவதாஸ் (29), ரமேஷ் பாபு (27), விஷ்ணு (28), அஜய்குமார் (24) ஆகிய 4 பேரை மடக்கி  பிடித்தனர். விசாரணையில் ஹவாலா பணம்  இருப்பதாக எண்ணி 4 பேரும் கொள்ளைய டிக்க முயன்றது தெரியவந்தது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரி செலுத்தவில்லையெனில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை

சேலம், ஜூன் 16- ஆத்தூர் நகராட்சியில் குடிநீர் கட்ட ணத்தைச் செலுத்தாதவர்களின் இணைப்பு கள் துண்டிக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் அ.வ.சையத் முஸ்தபா கமால் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலம் மாவட்டம், ஆத் தூர் நகராட்சியில் குடிநீர் கட்டணம் மூன்று  மாதங்களுக்கு ஒருமுறை வசூலிக்கப்படு கிறது. அதன்படி ஓராண்டிற்கு நான்கு காலாண்டுகளாக வசூல் செய்யப்பட்டு வரு கிறது. பிரதி மாதம் 1 ஆம் தேதி முதல் 15  ஆம் தேதி முடிய ஒரு சில குடிநீர் இணைப்பு தாரர்கள் தாங்களாகவே வந்து நகராட்சி கணினி மையத்தில் கட்டணம் செலுத்தி விடு கின்றனர். ஆனால், ஒரு சில குடிநீர் இணைப்பு தாரர்கள், காலாண்டு முடிவுற்றும், மேலும் சிலர் ஓராண்டுக்கு மேலாகியும் குடிநீர் கட்ட ணம் செலுத்தவில்லை. இதனால் நகராட்சி யில் நிர்வாக செலவினங்கள், தமிழ்நாடு குடிநீர் வாரியத்திற்கு மாதாதந்திர கட்டணம் செலுத்த இயலாத நிலை உள்ளது. இதைத் தவிர்க்கும் பொருட்டும், குடிநீர் விநியோக பணிகளை மேம்படுத்தவும், பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து நிலுவை குடிநீர் கட்டணங்களை 15 நாட்களுக்குள் நகராட்சி கணினி மையத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் குடி நீர் இணைப்பு துண்டிக்கப்படும். அதுபோல விதிகளுக்கு புறம்பாக வீடுகளில் மின்விசை மோட்டார் பொருத்தப்பட்டிருந்தால் அது பறிமுதல் செய்யப்படும். மறு இணைப்பு வேண்டுவோர் நாளது  தேதியில் குடிநீர் கட்டணம் நிலுவையின்றி செலுத்துவதுடன், கூடுதல் குடிநீர் விநியோக துணை விதிகளின் படி துண்டிப்பு கட்டணம் ரூ.500, மறு இணைப்பு கட்டணம் ரூ.500 மற் றும் அபராதத் தொகை ரூ.5 ஆயிரம் செலுத்தி விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மறு இணைப்பு வழங்க பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல் இரா.முத்தரசன் கண்டனம்

சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல் இரா.முத்தரசன் கண்டனம் ஈரோடு, ஜூன் 16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை  பெற்றுத்தர வேண்டும் என இரா.முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு கூட்டம், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் சனியன்று நடைபெற் றது. இதனைத்தொடர்ந்து கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ் நாடு முற்போக்கு எண்ணம் கொண்ட மாநிலமாக இருந்தா லும், நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து,  நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கித் தர வேண்டும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அரசின் சாதனை களையும், பாஜக கூட்டணியின் அபாயத்தையும் சுட்டிக்காட்டி  வாக்கு கேட்போம், என்றார். இந்நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகன்குமார் உடனிருந்தனர்.