districts

img

கோவை சரவணா ஸ்டோர்சில் இரண்டாவது நாளாக ரெய்டு

கோவை, டிச.2- கோவை சரவணா சூப்பர் ஸ்டோர்ஸ் ஜவுளி  கடை மற்றும் அலுவலங் களில் வருமான வரித் துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக வியாழன்று சோதனை நடத்தினர். சென்னை தி.நகரை மையமாக வைத்து நக ரின் பல இடங்களில் சர வணா ஸ்டோர்ஸ் ஜவுளி குழுமம் கடைகளை நடத்தி வருகிறது. புதனன்று காலை 7 மணிக்கு ஜவுளி குழுமத்துக்குச் சொந்தமான அலுவலகம், கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர்.  இந்நிலையில், இரண்டாவது நாளாக வியாழன்று காலை முதல் அதிகாரிகள் கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள சரவணா செல்வரத்தினம் கடையில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடைகளின் கதவுகளை மூடி தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜிஎஸ்டி முறைகேடு தொடர்பாக இந்த சோதனையை வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தியதாகவும், மேலும் பல கோடிக்கு முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

;