districts

img

சேலம் மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

சேலம், ஜூன் 3 – சேலம் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மையத்தை தேர்தல் பொது பார்வையாளர் மற்றும் மாவட்ட  ஆட்சியர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். சேலம் மக்களவை தொகுதியில் மொத்தமுள்ள 16 லட் சத்து 58 ஆயிரத்து 681 வாக்களர்களில் 12 லட்சத்து 96 ஆயி ரத்து 481 வாக்களர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்த னர். சேலம் மக்களவை தொகுதியை பொறுத்தவரை 78.13  சதவிகிதம் வாக்கு பதிவாகி உள்ளது மற்றும் தபால் வாக்குகள்  10 ஆயிரத்து 748 வாக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் சேலம் அருகே உள்ள கருப்பூர் பொறியியல் கல்லூரியில் பலத்த  பாதுகாப்போடு வைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் பதிவான வாக்குகள் அனைத்தும் செவ் வாயன்று எண்ணப்பட உள்ளது. குறிப்பாக தபால் வாக்கு கள் அனைத்தும் 6 மேஜைகளில் வைத்து தனித்தனியாக எண்ணப்படுகின்றன.மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதி வான வாக்குகள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தலா  14 மேஜைகள் மூலமாக எண்ணப்படுகின்றன. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தை சேலம்  மக்களவை தொகுதி தேர்தல் பார்வையாளர் பாட்டீல், சேலம்  மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, சேலம் மாநகர  காவல் ஆணையர் விஜயகுமாரி உள்ளிட்ட உயர்  அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண் டனர். தபால் வாக்கு எண்ணப்படும் பகுதி, மின்னணு வாக்கு  இயந்திரங்கள் எண்ணப்படும் பகுதி உள்ளிட்ட பகுதிகளில்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு ஏற்பா டுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண் டனர்.குறிப்பாக, மின்னணு வாக்கு இயந்திரங்கள் எண்ணப்ப டும் 14 மேஜைகளிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப் பட்டு உள்ளதை பார்வையிட்டு அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இதனிடையே, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத் திற்கு செல்லும் அரசியல் கட்சி முகவர்களுக்கு போன்று செய்தியாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து தேர்தல் ஆணையம் சுற்றிக்கை விடுத்துள்ளது.