அவிநாசி, ஜூன் 22- அவிநாசி அருகே பெரியாயிபாளையம் பகுதியில் சாலை அமைப்பதற்கான பணிகள் வெள்ளியன்று துவங்கப்பட் டது. அவிநாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட பெரி யாயிபாளையம் பகுதியில் சாலை வசதி வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, திமு கவை சேர்ந்த ஒன்றியக் கவுன்சிலர் சேது மாதவன் முயற்சியில் ஒன்றிய பொது நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள், துவங் கப்பட்டது. அதேபோல் பெரியாயிபாளையம் துணை சுகா தார நிலையத்தில் காம்பவுண்ட் சுவர் கேட்டிருந்தனர். ஒன்றியக் கவுன்சிலர் சேது மாதவன் தனியார் தொண்டு நிறுவனத்தை அணுகி காம்பவுண்ட் சுவர், மற்றும் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் பெற்று தந்துள்ளார். இதற்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.