திருப்பூர், ஆக.26- தமிழகத்தில் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு கண்காணிப்புக்குழு (விழிக்கண்) கூட்டங் கள் நடத்தப்பட வேண்டும் என்று தலித் விடுதலை இயக்கம் கோரிக்கை விடுத் துள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வருக்கு தலித் விடுதலை இயக்க மாநிலத் தலை வர் ச.கருப்பையா அனுப்பியுள்ள மனு வில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. மாநில அளவிலான விழிப்பு ணர்வு கண்காணிப்புக்குழு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜூலை மாதங் களில் கூட்டப்பட வேண்டும். ஆனால் இன்று வரை மேற்கண்ட இரு கூட்டங் களும் கூட்டப்படவில்லை. அனைத்து மாவட்டங்களிலும் ஆட் சியரின் தலைமையில், மாவட்ட அளவி லான விழிப்புணர்வு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆண்டுக்கு 4 முறை எஸ்சி/எஸ்டி வன்கொடுமை கள் தடுப்பு சட்ட வழக்குகள், பாதிக்கப் பட்ட மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆனால் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், இந்த ஆகஸ்ட் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் எந்தக் கூட்டங்களும் நடத்தப்படவில்லை. அதேபோல, பல வருவாய் கோட்டங்களில் கோட்டளவி லான விழிப்புணர்வு கண்காணிப்புக் குழுக் கள் அமைக்கப்படவில்லை. முறை யான ஆய்வுக் கூட்டமும் நடத்தப்பட வில்லை. இதனால் 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை மட்டும் தமிழ் நாட்டில் 1,151 கொலை, பாலியல் வன் கொடுமை மற்றும் தீக்குளிப்பு ஆகிய சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட் டின் நிவாரணம் ரூ.35 கோடியே 24 லட்சம் இன்னும் வழங்கப்படாமல் மறுக்கப்பட் டுள்ளது. எனவே, இப்பிரச்னையில் முதல்வர் நேரடியாக தலையிட்டு மாநில, மாவட்ட மற்றும் கோட்ட அளவிலான விழிப்பு ணர்வு கண்காணிப்புக் குழு கூட்டங்கள் முறையாக கூட்டப்படுவதற்கு நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும் பல் வேறு வன்கொடுமைகளால் பாதிக்கப் பட்ட பட்டியல் மற்றும் பழங்குடியின மக் களின் மறுவாழ்வு பணிகள் குறித்து ஆய்வுகள் செய்வதோடு, முறையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள் ளப்பட்டுள்ளது.