districts

img

ஏரி. கால்வாயை சீரமைத்திடுக

தருமபுரி, ஜூன் 3- அதியமான் கோட்டை ஏரியை சுத் தம் செய்து ஏரி கால்வாயை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி  ஒன்றியம் அதியமான் கோட்டையில் ஏரி  உள்ளது. நல்லம் பள்ளி மற்றும் அதன்  சுற்று வட்டார பகுதியில் கடந்த ஆண்டு பருவ மழை சரியாக பெய்யவில்லை.  இந்த ஆண்டிலும்  குறிப்பிடத்தக்க அளவில் மழை பெய்யவில்லை. இத னால், அதியமான் கோட்டை  ஏரி  தண் ணீர் தேங்காமல்  வறண்டு காணப்படு கிறது. ஏரியில் சில இடங்களில்  சிறிதளவு  தண்ணீர் மட்டுமே தேங்கி கிடக்கிறது. இந்த ஏரிக்கு மழைநீர் வருவதற்கான வரத்து கால்வாய்களை சீரமைத்து  ஏரிக்கு மழை நீர் முறையாக வந்து சேர  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற னர்.  இது குறித்து, அதியமான் கோட்டை  சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் கூறுகையில், தருமபுரி மாவட் டத்தில்  வேகமாக வளர்ந்து வரும் பகுதி களில் ஒன்றாக அதியமான் கோட்டை உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் அதியமான் கோட்டை சுற்று வட்டார பகுதியில் ஆயிரக்கணக் கான புதிய குடியி ருப்புகள் ஏற்பட் டுள்ளன. அதிய மான் கோட்டை யில் உள்ள ஏரி யில் மழைநீர் கணி சமாக தேங்கும் போது சுற்றுவட் டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட் டம் அதிகரிக்கும்.  இதனால் கிணறு கள் மற்றும் ஆழ்துளை போர்வெல்  ஆகியவற்றின் மூலம் கிடைக்கும்  நிலத்தடி நீரின் அளவும் அதிகரிக் கும். அதன் மூலம் இந்த பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவது தடுக்கப்படும். இந்த ஏரியில் மழை  நீர் கணிசமாக தேங்கும்  நூற்றுக்கணக் கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன  வசதி பெறும். இந்தப் பகுதியில் இந்த  ஆண்டு இதுவரை பருவமழை குறிப்பி டத்தக்க அளவில்  பெய்யவில்லை.இதன் காரணமாக  இந்த ஏரி அமைந் துள்ள சுற்றுவட்டார பகுதிகளில்  நிலத் தடி நீர்மட்டம் வெகுவாக குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ஏரிக்கு மழை நீர் வந்து  சேர்வதற்கான வரத்து கால்வாய்களை மழை நீர் தங்கு தடை இன்றி ஏரிக்கு வந்து சேரும் வகையில் சீரமைக்க வேண்டும். இந்த ஏரிக்கு தண்ணீர் வரும் வரத்து கால்வாய்களை முறை யாக பராமரிக்க வேண்டும். வரத்து கால் வாய்களில் ஆக்கிரமிப்புகளை  கண்ட றிந்து அகற்ற வேண்டும்.   தருமபுரி சுற்றுவட்டார பகுதியில் இப்போது கோடை மழை  தொடங்கி யுள்ளது.  பருவமழைக் காலமும் அடுத்து தொடங்க உள்ளது. எனவே அதற்கு முன்பாக இந்த ஏரிக்கு மழை  நீர் அதிக அளவில் வந்து தேங்குவதற் கான நடவடிக்கைகளை எடுக்க வேண் டும்.என தெரிவித்தனர்.