districts

img

மின்சார திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டம்

பள்ளிபாளையம், செப்.6- மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி செவ் வாயன்று சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மின்துறை தனியார்மயமாவதை கண்டித்தும், தமிழக  அரசு உத்தேசித்துள்ள  மின் கட்டண உயர்வை கைவிட  வேண்டும். ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள மின்சார திருத்த  சட்டம் 2022 மசோதாவை திரும்ப பெற வேண்டும். தேவை யான மின்சாரத்தை அரசே உற்பத்தி செய்ய வேண்டும். அடிக்கடி ஏற்படும் மின் தடையை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  பள்ளிபாளையம் ஒட்டமெத்தை மின் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.அசன் தலைமை தாங்கினார். இதில், விசைத்தறி தொழிலாளர் சங்க  மாவட்ட தலைவர் கே.மோகன், ஒன்றிய செயலாளர் முத்துக் குமார், ஒன்றிய பொருளாளர் பி.முருகேசன், மார்க்சிஸ்ட் கட்சி யின் ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி உட்பட திரளானோர் பங்கேற்றனர். இதனையடுத்து, மின் பகிர்மான கழக  பொறியா ளரை நேரில் சந்தித்து சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத் தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

;