districts

img

உருளைக்கிழங்கு வரத்து குறைவால் விலை உயர்வு

மேட்டுப்பாளையம், அக். 6- கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் செயல்பட்டு வரும் நீல கிரி கூட்டுறவு சங்கத்திற்கு ஊட்டி  உருளைக்கிழங்கு வரத்து குறைந்த தால் அதன் விலை உயர்ந்துள்ளது.. மேட்டுப்பாளையத்தில் உள்ள நீல கிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம், மற்றும் தனியார் ஏல மண்டிகளுக்கு ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கேத்தி,  கூடலூர் என பல்வேறு இடங்களில்  விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கு கள் விவசாயிகளால் கொண்டு வரப் பட்டு மொத்த வியாபாரிகளுக்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.. கடந்த சில நாட்களுக்கு முன், அதி கபட்சமாக 45 கிலோ எடை கொண்ட  ஒரு மூட்டை, ஊட்டி உருளைக்கிழங்கு ரூ.1,800க்கும் குறைவாக விற்பனை ஆனது. தற்போது வரத்து குறைந்துள் ளதால், விலை உயர்ந்து மூட்டை ரூபாய் 2850 விற்பனையாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில  நாட்களாக மழை பெய்து வருவதால்  அறுவடைக்கு தயாராக இருந்தும்  கிழங்கு சேகரிக்க இயலாத காரணத் தால் வரத்து குறைந்துள்ளதாக தெரி விக்கும் விற்பனை சங்கத்தினர் மழை யின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் ஊட்டி உருளைக்கிழங்கின் வரத்து மேலும் குறையவே வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.