districts

img

பிளஸ்- 1 பொதுத்தேர்வு முடிவு: கோவை மாவட்டம் முதலிடம்

கோவை, மே 14 - பிளஸ் 1 பொதுத் தேர்வு முடி வுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் 96. 02 சதவீ தம் பெற்று கோவை மாவட்டம் தமி ழக அளவில் முதலிடம் பிடித்துள் ளது. பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் மார்ச் 4 ஆம் தேதி முதல் 25 ஆம்  தேதி வரை நடைபெற்றது. கோவை  மாவட்டத்தில் 16, 484 மாணவர் கள், 19, 144 மாணவிகள் என மொத் தம் 35, 628 பேர் தேர்வினை எழுதினர். இதற்கான தேர்வு  முடிவுகள் இன்று வெளியிடப்பட் டுள்ளது. இதில் கோவை மாவட் டத்தைப் பொறுத்தவரை 15, 546 மாணவர்கள், 18, 664 மாணவிகள் என மொத்தம் 34, 210 பேர் தேர்ச்சி  பெற்றுள்ளனர். அதாவது 94. 31  சதவீத மாணவர்களும், 97. 49 சத வீத மாணவிகளும் என மொத்தம்  கோவை மாவட்டத்தின் தேர்ச்சி விகி தம் 96.02 சதவீதம் பெற்று, தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. அரசு பள்ளிகளுக்கான தேர்ச்சி விகிதத்தில் கோவை மாவட்டம் 4வது இடத்தை பிடித்துள்ளது. திருப்பூர் பிளஸ்- 1 அரசு பொதுத் தேர் வில் திருப்பூர் மாவட்டம் மாநில  அளவில் 3ஆவது இடம் பிடித்தது.  திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை மாணவர்கள் 1,952 பேரும், 4,431 மாணவிகளும், இருபாலர் பள்ளிகளைச் சேர்ந்த  19,781 பேரும் என மொத்தம் 26,164  பேர் எழுதினர். இதில் 24,917 பேர்  தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் கள் 1702 பேரும், மாணவிகள் 4237 பேரும், இருபாலர் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் என மொத்தம் 18,978 பேரும் தேர்ச்சி பெற்றனர். திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் 95.23 சதவீதம் பெற்று 3ஆவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது.  கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டம் 96.38 சதவீதம் பெற்று  முதலிடத்தை பிடித்தது. இதற்கி டையே அரசு பள்ளிகள் அளவிலும்  92.06 சதவீதம் பெற்று திருப்பூர்  மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித் துள்ளது. 78 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 5 ஆயிரத்து 666 பேரும், மாணவிகள் 6746 பேரும் என மொத்தம் 12,412 பேர்  தேர்வு எழுதினர். இதில் 5001  மாணவர்களும், 6426 மாணவிக ளும் என மொத்தம் 11,427 பேர் தேர்ச்சி பெற்றனர்.

;