சேலம், ஜூன் 1- காடையாம்பட்டி அருகே அடையாளம் தெரியாத விலங்கு ஒன்று தாக்கி, வளர்ப்பு நாய் உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சேலம் மாவட்டம். ஓமலூர் அருகே உள்ள காடை யாம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகள், டேனிஸ்பேட்டை வனச்சரகத்திற்குட்பட்டவையாகும். இந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அடையாளம் தெரியாத விலங்கின் நடமாட்டம் உள்ள தாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும், விவசாயிகள் தங்கள் ஆடுகளை மேய்ச்சலுக்கு விடும்போது, அவை வழி தவறி வனப்பகுதிக்கு சென்றால், அவற்றை வனப்பகுதியில் உள்ள ஏதோவொரு விலங்கு ஆடுகளை தாக்கி இறையாக்கிக் கொள்கிறது. இந்நிலையில், காடை யாம்பட்டி வட்டம், எலத்தூர் மலை அடிவாரத்தில் சென்ன கேசவன் என்பவர் வசித்து வருகிறார். ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர், தனக்கு சொந்தமான தோட்டத்தில் விவசா யம் செய்து வருகிறார். மேலும், வீட்டின் அருகே ஆட்டு கொட்டகை, கோழிப்பண்ணை போன்றவைகளை வைத்து இருப்பதால் பாதுகாப்பிற்காக விலை உயர்ந்த நான்கு நாய்களை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், வெள்ளி யன்று இரவு அடையாளம் தெரியாத விலங்கு ஒன்று, இவரது தோட்டத்தில் விவசாய உபகரணங்கள் வைக்கும் கொட்டகை அருகே கட்டி வைத்திருந்த வளர்ப்பு நாய்களில் ஒன்றை தாக்கி கொன்றுள்ளது. இதையடுத்து சனியன்று காலை சென்னகேசவன் நாய் இறந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, டேனிஸ்பேட்டை வனத்துறைக்கு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் இறந்த நாயை பரிசோதித்து, பல்வேறு தடயங்களை சேகரித்துள் ளனர். மேலும், அந்த விலங்கின் நடமாட்டத்தை கண்காணிக்க இரண்டு கண்காணிப்பு கேமராக்களும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து காடையாம்பட்டி வட்டாட்சியர் தலைமையில், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சனியன்று மாலை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.