நாமக்கல், ஜூன் 15- மின்தடை குறித்த தகவலை பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என மின்மேற்பார்வை அதிகாரிக்கு பள்ளிபாளையம் நகர்மன்றத் தலைவர் செல்வராஜ் கோரிக்கை விடுத்துள் ளார்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மின் தடை ஏற்பட்டு வருகிறது. இடை விடாத மின்தடை ஏற்படுவதால் விசைத் தறி தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்தித்து வருகின்றனர். இரவு நேரத்தில் ஏற்படும் மின்தடை பாதிப்பினால் வீட் டிலுள்ள குழந்தைகள், பெண்கள் உள் ளிட்டோர் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். இதுகுறித்த புகார் தொடர்ந்து பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகத் திற்கு வரவே, பள்ளிபாளையம் - சங்க கிரி சாலை, ஒட்டமெத்தை பகுதியில் அமைந்துள்ள, மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் அதிகா ரியை சந்தித்த பள்ளிபாளையம் நகர் மன்றத் தலைவர் மோ.செல்வராஜ், நக ராட்சி பொறியாளர் ரேணுகா ஆகி யோர், மின்தடை ஏற்படுகிறது குறித்த காரணங்களை கேட்டறிந்தனர். மேலும், இனிவரும் காலங்களில் மின்தடை முழுமையாக ஏற்படாத வகையில் வழி வகை செய்ய வேண்டும். எதிர்பாராத வகையில் ஏற்படும் மின்தடை தகவலை பொதுமக்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் அல்லது சிறு, குறு தொழிலாளர் கள், விசைத்தறி உரிமையாளர்கள் உள்ளிட்ட தரப்பினரை இணைத்து வாட்ஸ் ஆப் குழு உருவாக்கி அதில் தெரிவிக்க வேண்டுமென நகர்மன்றத் தலைவர் கேட்டுக்கொண்டார்.