districts

img

3ஆவது ஆசியா - பசிபிக் யோகாசன போட்டிகள் கடந்த மே மாதம்

3ஆவது ஆசியா - பசிபிக் யோகாசன போட்டிகள் கடந்த மே மாதம் 18-19  தேதிகளில் தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் நடைபெற்றது. இதில் இந் தியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, மியான்மர், நேபாளம்  ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருள் கிருத்திக், மிதுன், திஷாந்த், நிவ்யா, தக்ஷனா ஆகியோர் தங்கப் பதக்கமும், வர்ஷன்,  நிதர்ஷனா, வியாஷினி, சாஷ்வந்த் ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், தாரு ணிக்கா, சஷ்ருதா, சூர்யா, கனிஷ்கா, அத்விகா ஆகியோர் வெண்கலப் பதக் கத்தையும் வென்றனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும்  யோகா பயிற்சி ஆசிரியர் ஜாவித், காளீஸ்வரி, ரம்யா ஆகியோர் திருப்பூர்  தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜை நேரில் சந்தித்து வாழ்த்துப்  பெற்றனர்.

;