districts

நீலகிரி கோடை மழை: விதைப்பு பணியில் விவசாயிகள் தீவிரம்

உதகை, மே 14– நீலகிரியில் கோடை மழை பரவலாக  பெய்து வருவதால், விவசாய நிலங்களுக்கு  ஏற்ற காலநிலை என்று விவசாயிகள் விதைப்பு பணியில் தீவிரம் காட்டியுள்ளனர். நீலகிரியில் தேயிலைக்கு அடுத்தப்படி யாக மலை காய்கறி விவசாயம் அதிகளவில்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு உற் பத்தி செய்யப்படும் மலை காய்கறிகள் தமிழ கம் உட்பட கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி  மாநிலத்திற்கு அனுப்பப்படுகிறது. கடந் தாண்டில் பருவமழை பொய்த்ததன் எதிரொ லியாக நடப்பாண்டில், ஏப். இறுதி வரை  மழை பெய்யவில்லை. இதனால், கோடை மழையை எதிர்பார்த்து விதைப்பு பணிக்காக விவசாய நிலங்களை தயார்படுத்திய விவ சாயிகள் ஏமாற்றமடைந்தனர். மேலும் மலை  காய்கறி வரத்து அடியோடு குறைந்ததால் உதகை மார்க்கெட்டிலிருந்து பிற இடங்க ளுக்கு மலை காய்கறிகள் குறைந்தளவில் அனுப்ப முடிந்தது. மேலும், முதல் போக  விவசாயத்திற்காக, கோடை மழையை எதிர் பார்த்து, மலை காய்கறி விவசாயிகள் நிலங் களை தயார்படுத்தினர். ஆனால், நடப்பாண் டில் ஏப். மாதம் இறுதி வரை மழை பெய்ய வில்லை. இதனால், விவசாய நிலங்களில் உள்ள ஊற்றுநீரை பயன்படுத்தி வந்த விவ சாயிகள் கடும் வறட்சியால் நீரோடைகளில் தண்ணீர் வற்றியதால் மலை காய்கறி விவ சாயம் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. இந்நிலையில், நடப்பாண்டில் ஏப். இறுதி  வரை மழை பொழியவில்லை, ஆனால் மே 4  ஆம் தேதியன்று துவங்கிய கோடை மழை  மாவட்டம் முழுவதும் அவ்வப்போது பரவலாக  மழை பெய்தது. ஞாயிறன்று மாலை, 5:00  மணி நிலவரப்படி, 1269 மி.மீ மழை பதிவாகி யுள்ளது.  தற்போது பெய்த மழை, மலை காய்கறி தோட்டங்களுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை யாக அமைந்துள்ளது. உதகை சுற்றுவட்டார பகுதிகளான எம்.பாலாடா, நஞ்சநாடு, இத் தலார், தேனாடுகம்பை, கடநாடு, எப்பநாடு,  கொல்லிமலை ஓரநள்ளி மற்றும் மாவட்டத் தில் பெரும்பாலான இடங்களில் விவசாயி கள் உருளை கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டை கோஸ் உள்ளிட்ட மலை காய்கறிகள் விதைப்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்ற னர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,  தற்போது பெய்த கோடை மழை விவசாய  நிலங்களுக்கு ஏற்ற காலநிலை ஏற்பட்டிருப்ப தால் விவசாயிகள் விதைப்பு பணியில் தீவி ரம் காட்டி வருகின்றனர். தோட்டக்கலைத் துறை விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்களை தடையின்றி வழங்க வேண் டும், என்றார். தோட்டக்கலைத்துறை இணை இயக் குனர் சிபிலா மேரி கூறுகையில், விவசா யிகளுக்கு தேவையான இடுபொருட்களை விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர்கள் மூலம்  பெற்று கொள்ளலாம். அரசு மானியத்தில் விவசாயிகளுக்கான ஏராளமான திட்டங் கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூ லம் விவசாயிகள் பயனடையலாம், என் றார்.

;