districts

img

நெல்லையில் சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல்

உதகை, ஜூன் 18-   சாதிய வன்மத்துடன் நெல்லை யில் மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவல கத்தின் மீதான தாக்குதலை கண் டித்து, உதகையில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுப்பட்டனர். சாதி மறுப்பு திருமணம் செய்த  தம்பதிகளை கொலைவெறியோடு தேடி வந்த கும்பல் மார்க்சிஸ்ட் கட் சியின் திருநெல்வேலி மாவட்டக் குழு அலுவலகத்தினுள் புகுந்து வன்முறைத் தாக்குதல் நடத்தியது. சாதிய வன்மத்துடன் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்ட இயக்கங் கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக உதகையில் மார்க் சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  உதகை தாலுகாச் செயலாளர் நவீன் சந்திரன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்சியின்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கரலிங்கம், மாவட்டக் குழு உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட் டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.  சேலம் இதேபோன்று, சேலம் மாவட் டம், மேட்டூர் சின்னபார்க் பகுதி யில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் பி.கே.சிவ குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு  மாவட்டப் பொருளாளர் வி. இளங்கோ, மாவட்ட துணைச்செய லாளர் சி.கருப்பண்ணன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, ஓம லூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் தாலு காச் செயலாளர் என்.ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா உட்பட பலர் திரளானோர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு சூரம்பட்டியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரக் குழு உறுப்பினர் எஸ்.ரவி தலைமை  வகித்தார். இதில், மாவட்டச் செயலா ளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ப.மாரிமுத்து, எஸ்.சுப்ரமணியன் ஆகியோர் கண் டன உரையாற்றினர். சிவகிரியில் கிளைச் செயலாளர் சசி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் சி.முருகேசன், தாலுகா செயலாளர் கே.பி.கனக வேல் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். பவானியில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா கமிட்டி  உறுப்பினர் கே.எம்.சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனி வேல், தாலுகா செயலாளர் எஸ். மாணிக்கம், மாவட்டக் குழு உறுப்பி னர் ஏ.ஜெகநாதன் ஆகியோர் கண் டன உரையாற்றினர்.  கோவை நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகம் மீது நடத் தப்பட்ட சாதி ஆணவ தாக்குதலை கண்டித்து கோவையில் சமூக நீதி  கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இவ்வமைப்பின் தலைவர்  பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏரா ளமானோர் பங்கேற்றனர்.