நாமக்கல், ஜூலை 8- பள்ளிபாளையம், ராஜவீதி பகுதியில் உள்ள கூட்டு குடிநீர் திட்ட குழாயை உடைப்பால் குடிநீர் வீணாகி வருகிறது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ராஜ வீதி பகுதியில் திருச் செங்கோடுக்கு கொண்டு செல்லப்படும் கூட்டு குடிநீர் திட்டக் குழாய் உள்ளது. இந்நிலையில், இக்குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால், ராஜவீதி சாலை முழுவதும் குடிநீர் ஆறாக ஓடியது. மேலும், ஒரு சில வீடுகளுக்குள் குடிநீர் புகுந்தது. இதனையடுத்து, உடனடியாக குடிநீர் குழாய் இணைப்பு மோட்டார் நிறுத்தப் பட்டது. கடந்த மாதத்தில் இதே பகுதியில் குடி நீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு 50க்கும் மேற் பட்ட வீடுகளுக்குள் குடிநீர் புகுந்தது குறிப் பிடத்தக்கது.