கோவை, ஜூன் 6- மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் வெற்றி பெற்ற கோவையை சேர்ந்த மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றனர்.
கடந்த மே மாதம் 15 ஆம் தேதியன்று மலே சியாவில் உள்ள லிங்கன் (Lincoln) பல்க லைக்கழகத்தில் சர்வதேச யோகா போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்தியாவை சேர்ந்த பலரும் கலந்து கொண்டு திறமைகளை வெளிப டுத்தினர்.
இந்நிலையில், இப்போட்டியில் முதலி டம் மற்றும் இரண்டாம் இடம் பெற்று வெற்றி பெற்ற கோவை எஸ்எஸ்விஎம் பள்ளியை சேர்ந்த 5 மாணவர்கள் நிகிலேஷ், ஹரிஸ் கார்த்தி, ஹரி ஷர்வேஷ், அபய், ஷஸ்வத் ஆகியோர் 2 ஆம் இடத்தை பிடித்துயுள்ள னர். இதனைத் தொடர்ந்து, இந்துஸ்தான் கல் லூரியை சேர்ந்த மாணவர் கெளதம், வேலம் மாள் போதி கேம்பஸை சேர்ந்த மாணவர் கீர்த்தி ரோகன் ஆகியோர் ஆட்சியர் கிராந்தி குமார் பாடியை சந்தித்து வாழ்த்து பெற்ற னர். இப்போட்டியில், வெற்றி பெற்றவர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற உள்ள யோகா போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பி டத்தக்கது.