மேட்டுபாளையம், ஜூன் 5- நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் வேகமாக உயர்ந்து வரும் பில்லூர் அணையின் நீர் மட்டம் அணைக்கு விநா டிக்கு 6 ஆயிரம் கன அடி அதிகரித்துள்ளது. அணை யில் இருந்து நீர்மின் உற் பத்தி பணிக்காக தண்ணீர் திறந்து விடப்படுவதால் பவானியாற்றின் வேகம் அதிகரித்துள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைக் காடுகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிக ரித்தபடி உள்ளது. நூறு அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர் மட்டம் திங்களன்று 73 அடியாக இருந்த நிலையில், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக செவ்வாயன்று 81 அடியாகவும் புதனன்று 83 அடியாகவும் உயர்ந்துள்ளது.கன மழை தொடரும் பட் சத்தில் இன்னும் இரண்டொரு நாளில் அணை அதன் முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அணைக்கான தற்போதைய நீர்வரத்து விநாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக உள்ளது. அதே நேரத்தில் அணையில் இருந்து தற் போது நீர் மின் உற்பத்தி பணிக்காக அதே அளவானா விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் பவானியாற்றில் திறந்து விடப்பட்டு வரு கிறது. இதனால், ஆற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. பில்லூர் அணையில் இருந்து பவானியாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் பவானி சாகர் அணை யின் நீர்மட்டம் உயரும் சூழல் உருவாகி யுள்ளது.