districts

img

ஜேடர்பாளையத்தில் பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு தொடர்ந்து சமூக விரோத செயல்களால் பதற்றம்

நாமக்கல், ஜூலை 9- ஜேடர்பாளையம் அருகே பாக்கு மரங்கள், மரவள்ளி கிழங்கு  பயிர்களை வெட்டி சாய்த்த துடன்,  பம்புசெட் மோட்டார்களை  சமூகவிரோதிகள் சேதப் படுத்தி உள்ளனர். இதுகுறித்து,  மேற்கு மண்டல காவல் துறைத்  தலைவர் சுதாகர், நாமக்கல்   மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ராஜேஷ்கண்ணண் ஆகி யோர் நேரில் விசாரணை மேற் கொண்டனர்.  நாமக்கல் மாவட்டம், பரமத்தி  வேலூர் அருகே பொத்தனூர் சவுந் தர்ராஜன் என்பவருக்கு சொந்த மான பாக்கு தோப்பு சின்ன மருதூர் அருகே வெங்கச்சல்லிக்காட்டில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 3 ஏக்கரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 3000 பாக்கு மரங்கள் நடவு செய்து , கடந்த 3 ஆண்டுகளாக பராமரித்து  வந்தார். இந்நிலையில், ஞாயிறன்று அதி காலை அடையாளம் தெரியாத நபர் கள் 1000 பாக்கு மரங்களை வெட்டி  சாய்த்துள்ளனர். மேலும், அதேப் பகுதியை சேர்ந்த பிரகாஷ், மணி  ஆகியோரின் தோட்டத்திற்குள் புகுந்த  அடையாளம் தெரியாத நபர்கள்,  50 சென்ட் நிலத்தில் பயிரிடப்பட்ட  3 மாத பயிரான மரவள்ளி கிழங்கு  மற்றும் 10க்கும் மேற்பட்ட விவசாய பம்பு செட் மோட்டார்களை சேதப் படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.  இதுகுறித்து பாதிக்கப்பட்ட தோட்டத்து உரிமையாளர்கள் கொடுத்த தகவலின் அடிப்படை யில், சம்பவ இடத்திற்கு மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் சுதாகர், நாமக்கல் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் போலீசார் நேரில்  சென்று பார்வையிட்டனர். மேலும்,  தடவியல் நிபுணர்களை வரவ ழைத்து முக்கிய தடயங்களை சேகரித்தனர்.   இச்சம்பவம் அப்பகுதியில்  பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சி யர் ஞாயிறன்று வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது, பரமத்தி வேலூர் வட்டம்,  ஜேடர்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர் களால் சமூகவிரோத செயல்கள் நடைபெற்று வருகின்றன. எனவே, சட்டவிரோதமான செயல்பாடு களில் ஈடுபடும் நபர்கள் நடமாட்டம்   இருப்பதாக தெரிந்தால் 9498181340  என்ற எண்ணை தொடர்பு கொள் ளலாம் என தெரிவித்துள்ளது.      முன்னதாக, கடந்த மார்ச் மாதம்  11ஆம் தேதியன்று ஜேடர் பாளையம் பகுதியில் பட்டதாரி இளம் பெண் பாலியல் வன்கொடு மையால் கொலை செய்யப் பட்டார். இந்த வன்கொலை வழக் கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்  நாடு விவசாய தொழிலாளர் கள் சங்கம் ஆகியவை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டன. இதன்  விளைவாக, தமிழ்நாடு அரசு உத்தரவின்படி சிபிசிஐடி விசா ரணை நடைபெற்று வருவது குறிப் பிடத்தக்கது.