districts

img

நல்லாசிரியருக்கு இடுவாய் ஊராட்சி நிர்வாகம் பாராட்டு

திருப்பூர், செப். 6 - திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சி பாரதிபுரம் நடுநி லைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரியும் காளீஸ்வரி சுப்பிரமணியம் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார். அவருக்கு செவ்வாயன்று இடுவாய் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டி சிறப்பு செய்யப் பட்டது. செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தன்று சென்னையில் நடை பெற்ற விழாவில் அமைச்சர்கள் பங்கேற்று தமிழக அளவில் நல்லாசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விரு துகள் வழங்கினர். இதில் இடுவாய் பாரதிபுரம் நடுநிலைப்  பள்ளி தலைமை ஆசிரியர் காளீஸ்வரி சுப்பிரமணியமும் விருது பெற்றார். செவ்வாயன்று பள்ளிக்கு வருகை தந்த காளீஸ்வரிக்கு இடுவாய் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு நிகழ்ச்சி  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இடுவாய் ஊராட்சி மன்றத்  தலைவர் க.கணேசன் தலைமை ஏற்றார். ஊராட்சி மன்றத்  துணைத் தலைவர் எஸ்.பரமசிவம், ஊராட்சி ஒன்றிய  கவுன்சிலர் பிரபு என்கிற பாலசுப்பிரமணியம் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்ற மக்கள் பிரதி நிதிகள் உள்ளிட்டோர் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்  காளீஸ்வரிக்கு பாராட்டுத் தெரிவித்து சால்வை அணி வித்து வாழ்த்தினர். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப் பினர்கள் ஆர்.ஈஸ்வரி, பி.ஈஸ்வரி, ரமேஷ், எம்.கணேசன்,  ஊராட்சி செயலர் நாகராஜ், மகுடபதி மற்றும் மாணவ,  மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

;