அவிநாசி, டிச.13- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடை பெற்ற நிலக்கடலை ஏலத் தில் ரூ.15 லட்சத்திற்கு வர்த்த கம் நடைபெற்றது. சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற நிலக் கடலை ஏலத்தில் 450 மூட்டை கள் விற்பனைக்காக வந்தி ருந்தன. இதில் குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக் கடலை ரூ.7 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரத்து 300 வரையி லும், இரண்டாவது ரக நிலக் கடலை ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.6 ஆயிரத்து 700 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.6 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரத்து 300 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.15 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது. இதில் 16 வியாபாரிகள், 44 விவசா யிகள் பங்கேற்றனர்.