அரசு ஊழியர் சங்கம் வாழ்த்து
ஈரோடு, ஜூன் 7- அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
பெருந்துறையில் செயல்பட்டு வரும் ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக மருத்துவர் எஸ்.செந்தில்குமார் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பெருந்துறை செயலாளர் டி.கோமதி, எம்ஆர்பி செவிலி யர் மேம்பாட்டு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.சசிகலா, தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜெ.எட்வின் பிரசாத், தமிழ்நாடு மருத்துவ துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் எஸ்.டி.சிவ குமார், தமிழ்நாடு அரசு மருத்துவமனை கண் பரிசோதகர் சங்க செயலாளர் என்.முரளிகிருஷ்ணன், சத்துணவு ஊழியர் சங்கத்தின் சென்னிமலை ஒன்றியச் செயலாளர் எம்.செல்வி, இந்தியமுறை மருத்துவமனை பணியாளர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் எம்.ஜான் வில்லியம், மருத்துவ கல்லூரி மருத்துவமனை அலுவலக பணியாளர் சங்கத் தின் மாவட்ட அமைப்பாளர் எம்.நடராஜன் மற்றும் தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் மு.சீனிவாசன், மாவட்டச் செயலாளர் ச.விஜய மனோகரன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’
சேலம், ஜூன் 7- ஆத்தூர் நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு வாடகை பாக்கி செலுத்தாததால், வருவாய் அலுவலர்கள் வியாழனன்று அக்கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சிக்கு சொந்தமாக வணிக வளாகம், பேருந்து நிலையக் கடைகள் உள்ளிட்ட குத்தகை இனங்கள் வருவாய் ஈட்டும் வகையில் உள்ளன. ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 3 கடைகளின் வாடகை, கடந்த சில ஆண்டுகளாக செலுத்தப்படாமல் உள்ளதாக நகராட்சி ஆணையர் அ.வ.சையத் முஸ்தபா கமாலிடம் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து அவரின் உத்தரவின்பேரில், 3 கடைகளுக்கும், பழைய பேருந்து நிலையத்தில் ஒரு கடை உள்ளிட்ட நான்கு கடைகளுக்கும் வருவாய் அலுவலர்கள் ‘சீல்’ வைத்தனர்.
ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
கோவை, ஜூன் 7- பொள்ளாச்சி அருகே ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள அம்ப ராம்பாளையம் ஆற்றில் பள்ளி விடுமுறையை கழிக்க, உக்கடம் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் 5 பேர் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஒரு சிறுவன் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதனையறிந்த அங்கிருந்த வர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த னர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றில் மாயமான சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரப் போராட்டத்திற்குபின், உக்கடம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (14) உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இதுகுறித்து ஆனைமலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜவுளித்துறையில் வேலைவாய்ப்பு
நாமக்கல், ஜூன் 7- தமிழ்நாட்டின் ஜவுளித்துறையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவக்குவதற்காக தமிழ்நாடு அரசு துணி நூல் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் வழிகாட்டு தலின் படி தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் மூலமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சி வகுப்பு குறித்த தகவலை https://tntextiles.tn.gov.in/jobs/ என்ற இனையதள முகவரியில் தகவல் பெறலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.
சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரம்
உதகை, ஜூன் 7- தேவர்சோலை பகுதியில் உலா வரும் சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட பொன்னுவயல் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அப்பகுதியில் முகாமிட்டு வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது அங்குள்ள தேயிலை, காப்பித்தோட்டங்களில் சிறுத்தை நடமாடுவது உறுதியானது. சிறுத்தை நடக்க முடி யாமல் மெதுவாகவே அந்த இடங்களை கடந்து செல்கிறது. சிறுத்தையின் உடலில் காயங்கள் ஏற்பட்டு இருக்கலாம் அல்லது வயது முதிர்வு காரணமாக சிறுத்தை நடக்க முடியா மல் இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து விட்டதால் அந்த சிறுத்தை மனிதர்களை தாக்கும் முன்பு அதனை பிடிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் சிறுத்தையை கூண்டு வைத்து பி டிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள் ளனர். கூண்டில் சிக்காத பட்சத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
செல்போன் திருடியவரை விரட்டி பிடித்த காவலர்!
கோவை, ஜூன் 7- கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் செல் போன் திருடியவரை விரட்டி பிடித்த தலைமைக் காவல ரின் செயலை பொதுமக்கள் பாராட்டினர்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ். தனது குடும்பத்துடன் கோவையிலுள்ள மகள் வீட்டிற்கு வந்துள் ளார். ஈஷா யோகா மையம் சென்று திரும்பி வரும் பொழுது பேருந்தில் அவர் பையில் இருந்த மொபைல் போன் காணாமல் போனது. இதுகுறித்து ராஜ் காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் புறக்காவல் நிலையத்தில் பணியிலிருந்த தலைமை காவலர் கந்தசாமி யிடம் புகாரளித்தார். அதன்பேரில் பேருந்தில் வந்த வர்களை, 2 போலீசாருடன் சோதனை செய்தனர். அப்பொ ழுது செல்போனை திருடியவர் தப்பி ஓடுவதை கண்ட காவல் துறையினர் ஓடிச்சென்று அவரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. தலைமை காவலரின் இந்த துரித செயலை கண்டு பயணிகள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.