districts

img

வலுத்தூக்கும் போட்டியில் தங்கம்

சேலம், ஜூன் 1- சேலத்திலுள்ள தனியார் கல்லூரி மாணவர், அகில இந்திய அளவிலான வலுத் தூக்கும் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத் துள்ளார். மயிலாடுதுறை மாவட் டத்தைச் சேர்ந்த ரவி என்ப வரின் மகன் பாரத். இவர் சேலம் அம்மாபேட்டை பகுதி யில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரி யில் முதுகலை பொறியியல் இரண்டாமாண்டு பயின்று வரு கிறார். இவர் சென்னையில் கடந்த மே 20 முதல் மே 25 ஆம்  தேதி வரை நடைபெற்ற அகில இந்திய அளவிலான பல் கலைக்கழகங்களுக்கு இடையிலான வலுத்தூக்கும் போட்டி யில் 83 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டார். மொத்தம் 767.5 கிலோ வலுத்தூக்கி முதலிடம் பிடித்து தங்கம் பதக் கத்தை தட்டித்தூக்கினார். தேசிய அளவில் 100 பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங் கனைகள் பங்கேற்ற இப்போட்டியில் தங்கம் வென்ற மாண வனை, கல்லூரி நிர்வாகத்தினர் பாராட்டி வாழ்த்து தெரி வித்தனர். இதைத்தொடர்ந்து சர்வதேச அளவிலான பல்க லைக்கழகங்களுக்கு இடையிலான வலுத்தூக்கும் போட்டி யில் பங்கேற்க பாரத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வலுத்தூக்கும் வீரர் பாரத் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் ஏராளமான வீரர், வீராங்கனைகள் திற மையுடன் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு முறையான அரசு உதவிகள் கிடைப்பதில்லை. எனவே, அரசு எங்களைப் போன்ற வீரர்களுக்கு உதவ முன்வந்தால் நிறைய மாணவர் கள் பல்வேறு போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்ப டுத்தி, பதக்கங்களை வெல்வார்கள். வலுத்தூக்கும் போட்டி  ஒலிம்பிக்கில் இடம்பெற வேண்டும், என்றார்.